‘அவங்க கூடலாம் கூட்டணி வைக்குற நிலையில் அதிமுக இல்லை’ – அமைச்சர் அதிரடி!

 

‘அவங்க கூடலாம் கூட்டணி வைக்குற நிலையில் அதிமுக இல்லை’ – அமைச்சர் அதிரடி!

அமமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சசிகலா வருகையால் அதிமுக கலக்கத்தில் இருந்தாலும், அதை பொருட்படுத்தாது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை வந்த பிரதமர் மோடி, அதிமுகவுக்கு புத்துணர்ச்சியை அளித்து விட்டு சென்றிருக்கிறார். ஓபிஎஸ், ஈபிஎஸ் கரங்களை பிடித்து உயர்த்தி, அரசு நிகழ்ச்சியிலேயே நாளைய ஆட்சி நமதே என்பதை குறிப்பால் சொல்லிவிட்டுச் சென்றார்.

‘அவங்க கூடலாம் கூட்டணி வைக்குற நிலையில் அதிமுக இல்லை’ – அமைச்சர் அதிரடி!

இது அமமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் வயிற்றில் புளியை கரைக்கச் செய்தது. இதுவரை சசிகலா வருகையால், குழப்பத்தில் இருந்த அதிமுகவோ தற்போது யார் வந்தாலும் பிரச்னை இல்லை என்பதை போல சீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக இல்லை என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

‘அவங்க கூடலாம் கூட்டணி வைக்குற நிலையில் அதிமுக இல்லை’ – அமைச்சர் அதிரடி!

அமமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.