ஆர்.பி. உதயகுமாரிடமிருந்து கடம்பூர் ராஜூ கைக்கு போன பொறுப்பு!

 

ஆர்.பி. உதயகுமாரிடமிருந்து கடம்பூர் ராஜூ கைக்கு போன பொறுப்பு!

ஆர்.பி. உதயகுமாரிடம் இருந்த பொறுப்பு தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளையும் கடமைகளையும் விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.பி. உதயகுமாரிடமிருந்து கடம்பூர் ராஜூ கைக்கு போன பொறுப்பு!

அதன்படி அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு மதுரை புறநகர், மேற்கு தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு தென்காசி வடக்கு, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது