நிர்வாக வசதி, கட்சி பணிகளை மேம்படுத்த அதிமுக புதுத்திட்டம்

 

நிர்வாக வசதி, கட்சி பணிகளை மேம்படுத்த அதிமுக புதுத்திட்டம்

நிர்வாக வசதிக்காகவும், கட்சி பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக ஒபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநகர் அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாக வசதி, கட்சி பணிகளை மேம்படுத்த அதிமுக புதுத்திட்டம்

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.பி சி.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பிகே வைரமுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ரவிச்சந்திரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.