“நில விற்பனையில் மோசடி; அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு” – எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

 

“நில விற்பனையில் மோசடி; அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு” – எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு

பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், அரசின் அனுமதியின்றி பல நூறு ஏக்கர் நிலங்கள், விளை நிலங்கள் என்ற போர்வையில் வீட்டுமனைகள் ஆக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக பெருந்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நில விற்பனையில் மோசடி; அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு” – எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் இல்லாதவர்கள், அதிமுக கரை வேட்டியை கட்டிக்கொண்டு, ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இத்தகைய நடவடிக்கைகளால், அதிமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அரசு முறையான விசாரணை செய்து முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்த தோப்பு வெங்கடாசலம், இது குறித்து முதல்வரிடம் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.