சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் அறிவிப்பு
Mar 17, 2021, 22:07 IST1615999058000
அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக எம்.எல்.ஏ சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காரவள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட திமுகவில் மாவட்ட துணை செயலாளர் பதவியில் இருந்தார். இதனையடுத்து 1996 ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின் கருத்துவேறுபாட்டால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இந்தசூழலில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், சேந்தமங்கலம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.