அ.தி.மு.க உறுப்பினர் புதுப்பிப்பு கால அவகாசம் நீட்டிப்பு! – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அறிவிப்பு

 

அ.தி.மு.க உறுப்பினர் புதுப்பிப்பு கால அவகாசம் நீட்டிப்பு! – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அறிவிப்பு

அ.தி.மு.க உறுப்பினர் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அ.தி.மு.க உறுப்பினர் புதுப்பிப்பு கால அவகாசம் நீட்டிப்பு! – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அறிவிப்பு
இது தொடர்பாக இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கடைசி நாள் 10ம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய சூழலில், பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை

அ.தி.மு.க உறுப்பினர் புதுப்பிப்பு கால அவகாசம் நீட்டிப்பு! – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அறிவிப்பு

தலைமைக் கழகத்தில் சேர்ப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துத் தர வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களைத் தலைமைக் கழகத்தில் சேர்ப்பதற்கான காலக்கெடு வருகிற 17ம் தேதி (திங்கட்கிழமை) வரை

அ.தி.மு.க உறுப்பினர் புதுப்பிப்பு கால அவகாசம் நீட்டிப்பு! – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அறிவிப்பு

நீட்டிக்கப்படுகிறது. இனிமேல் இந்தக் காலக்கெடு கட்டாயம் நீட்டிக்கப்பட மாட்டாது.
எனவே, மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் தற்போது அளிக்கப்பட்ட அவகாசத்தை பயன்படுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்தல், விடுபட்ட உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணியில் ஈடுபடக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.