பணப்பட்டுவாடா… கையும் களவுமாக சிக்கிய அதிமுக நிர்வாகி!

 

பணப்பட்டுவாடா… கையும் களவுமாக சிக்கிய அதிமுக நிர்வாகி!

தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அதே வேளையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பறக்கும் படை, கையும் களவுமாக அரசியல் பிரமுகர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சியினர் இதுவரை சிக்கியுள்ளனர்.

பணப்பட்டுவாடா… கையும் களவுமாக சிக்கிய அதிமுக நிர்வாகி!

இந்த நிலையில், கன்னங்குறிச்சி பேரூராட்சியின் அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் பணப்பட்டுவாடா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீடு வீடாக பணம் விநியோகம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணப்பட்டுவாடா… கையும் களவுமாக சிக்கிய அதிமுக நிர்வாகி!

பணத்திற்கான உரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததால் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.