‘ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய’… அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைகிறார்!

 

‘ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய’… அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைகிறார்!

அதிமுக முன்னாள் எம்.பி பரசுராமன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து முதல்வரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, பிற கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைகிறார்கள். அண்மையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய புள்ளிகளாக இருந்த மகேந்திரன், பத்ம பிரியா உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதே போல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலமும் திமுகவில் இணைந்து விட்டார்.

‘ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய’… அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைகிறார்!

இந்த நிலையில், 2014-19 ஆண்டில் தஞ்சை தொகுதியில் எம்.பி.யாக இருந்த பரசுராமன் திமுகவில் இணைவதற்காக மு.க.ஸ்டாலினை சந்திக்க தேதி கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். விரைவில் அவர் திமுகவில் இணைந்து விடுவார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பரசுராமன், திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. மக்கள் யாரை நம்பினார்களோ அவர் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். மக்கள் மகிழ்ச்சி அடைவதை போல நானும் ஸ்டாலின் ஆட்சியை கண்டு பெருமைப்படுகிறேன். இந்த ஆட்சியே தொடர வேண்டும் என்பதே எனது ஆசை. தளபதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலினை புகழ்ந்து பேசியிருந்தார்.

முன்னாள் எம்.பி பரசுராமன் இவ்வாறு பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் திமுகவில் இணையவிருப்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக அதிமுக முன்னாள் எம்பிக்கள் பி.ஆர்.சுந்தரம், விஜிலா, பி.ஜி.நாராயணன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.