கொரோனாவால் உயிரிழந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர்!
Apr 18, 2021, 19:47 IST1618755439000
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான குளித்தலை பாப்பா சுந்தரம் கொரோனா தொற்று காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
பாப்பா சுந்தரம் கடந்த 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்டு குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி நடைபெற்றது.
இதனையடுத்து 1991 சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட பாப்பா சுந்தரம் மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996லஇல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல் தோல்வியை தழுவினார். இருப்பினும் 2001இல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.