“கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” – அதிமுக புகார்!

 

“கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” – அதிமுக புகார்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடக்கவிருக்கிறது. தேர்தலில் மக்களை வாக்களிக்க வைக்க பணம் என்ற ஆயுத்தை அரசியல் கட்சிகள் கையிலெடுத்துள்ளன. அந்த வகையில், திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில் போலீசாருக்கே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் திமுக பணப்பட்டுவாடா செய்தது உறுதியானது.

“கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” – அதிமுக புகார்!

அதன் படி, பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட 6 காவலர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு, திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ண பாரதி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் திருச்சி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

“கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” – அதிமுக புகார்!

புகாரளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பத்மநாபன், கே.என்.நேரு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். திமுக பணப்பட்டுவாடா செய்தது உறுதியாகி இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் நான் தான் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார். இந்த புகார் குறித்து பேசிய கே.என்.நேரு, தனக்கு எதிராக தவறான தகவல்களை அதிமுக பரப்புவதாக குற்றஞ்சாட்டினார்.