முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தேர்வு; புதுச்சேரியில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

 

முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தேர்வு; புதுச்சேரியில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புதுச்சேரியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தேர்வு; புதுச்சேரியில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

தமிழகத்தில் ஆளும் அரசான அதிமுகவில், அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை அண்மையில் எழுந்தது. இதற்கு அதிமுக தலைமையால் கூட முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. இருப்பினும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முதல்வர் வேட்பாளர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இன்று காலை, எடப்பாடி பழனிசாமி தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என ஓபிஎஸ் அறிவித்தார்.

முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தேர்வு; புதுச்சேரியில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதிமுகவில் நீடித்து வந்த பெருங்குழப்பம் இன்று ஓய்ந்ததால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதனை கொண்டாட வேண்டும் என புதுச்சேரி, முத்தியால்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தொண்டர்களை கேட்டுக் கொண்டார். அதன் படி, காந்தி வீதி மணிக்கூண்டு அருகே திரண்ட அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.