அதிமுக பிரமுகரை தாக்கி, வேன்கள் தீ வைத்து எரிப்பு… திமுகவினர் மீது வழக்குப்பதிவு…

 

அதிமுக பிரமுகரை தாக்கி, வேன்கள் தீ வைத்து எரிப்பு… திமுகவினர் மீது வழக்குப்பதிவு…

தூத்துக்குடி

விளாத்திக்குளம் அருகே தேர்தல் மோதலில் அதிமுக பிரமுகரை தாக்கி, அவரது 3 வேன்களுக்கு தீ வைத்த, திமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அடுத்த என்.ஜெகவீரபுரத்தை சேர்ந்தவர் தாஸ். இவர் புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவரான அதிமுகவை சேர்ந்த சுசிலா தனஞ்செயனின் உறவினர் ஆவார். இவர், சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பனுப்பனுக்கு ஆதரவாக, தனது வேன்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி வந்தார்.

அதிமுக பிரமுகரை தாக்கி, வேன்கள் தீ வைத்து எரிப்பு… திமுகவினர் மீது வழக்குப்பதிவு…

இதனிடையே, தேர்தல் தொடர்பாக தாஸ் தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் அழகுபாண்டியன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், நேற்று இரவு அழகுபாண்டியன் தரப்பினர், தாஸை தாக்கிவிட்டு அவர் வீட்டில் நின்ற 3 வேன்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினார். இதில் ஒரு வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

காயமடைந்த தாஸை, உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் காடல்குடி போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு, ஊராட்சி மன்ற தலைவர் அழகுபாண்டியன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.