அண்ணாவின் 113வது பிறந்த நாள் – அதிமுகவின் முக்கிய அறிவிப்பு!

 

அண்ணாவின் 113வது பிறந்த நாள் – அதிமுகவின் முக்கிய அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணா 133-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாவின் 113வது பிறந்த நாள் – அதிமுகவின் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113வது பிறந்த நாளான வருகின்ற 15ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவருடைய திருவுருவச் சிலைக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அண்ணாவின் 113வது பிறந்த நாள் – அதிமுகவின் முக்கிய அறிவிப்பு!

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கழக நிர்வாகிகள் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து , முகக்கவசம் அணிந்து மின்னுகிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.