பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

 

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

பரோலில் உள்ள பேரறிவாளன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். கொரோனா காரணமாக சிறைச்சாலைகளில் பல கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் பேரறிவாளனுக்கு சிறையில் தொற்று ஏற்படும் என்பதால் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க கோரி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு அவர் புழல் சிறையிலிருந்து திருப்பத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கக்கோரி அவரது தாய் அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் வயிறு மற்றும் சிறுநீரக சிகிச்சை பெற பேரறிவாளன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பேரறிவாளன் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.