‘குற்ற உணர்ச்சி’… தோழி உயிரிழந்ததை அறிந்து கதறிய யாஷிகா ஆனந்த்!

 

‘குற்ற உணர்ச்சி’… தோழி உயிரிழந்ததை அறிந்து கதறிய யாஷிகா ஆனந்த்!

விபத்தில் தோழி உயிரிழந்ததை அறிந்த நடிகை யாஷிகா ஆனந்த் உயிருடன் வாழவே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவு ஒரு மணி அளவில் சாலை தடுப்பில் மோதி அவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

‘குற்ற உணர்ச்சி’… தோழி உயிரிழந்ததை அறிந்து கதறிய யாஷிகா ஆனந்த்!

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காரை அதிவேகமாக ஓட்டியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சாதாரண வார்டுக்கு கடந்த 31ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

‘குற்ற உணர்ச்சி’… தோழி உயிரிழந்ததை அறிந்து கதறிய யாஷிகா ஆனந்த்!

இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த போது தோழி பவணி உயிரிழந்ததை அறிந்திடாத யாஷிகாவிடம் வள்ளிச்செட்டி பவணி உயிரிழந்தது பற்றி அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். கதறி அழுத யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நான் இப்போது எப்படி இருக்கிறேன் என்பதை வார்த்தையால் விவரிக்க முடியாது. உயிருடன் இருக்கவே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா அல்லது என் உயிர் தோழியே என்னிடமிருந்து பறித்துக் கொண்டதற்காக வெறுப்பதா என தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் பவணி. உனது குடும்பத்தை மோசமான நிலைக்கு தள்ளியதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். ஒருநாள் அவர்கள் என்னை மன்னிப்பார்கள் என நம்புகிறேன். நீ என்னிடம் திரும்பி வர கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உன்னுடன் இருந்த நினைவலைகளோடு என்றும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் இது தனக்கு பெரிய இழப்பு என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகை யாஷிகா ஆனந்திற்கு நாளை பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.