புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகை வரலட்சுமி!
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான இவர் கதாநாயகி கதாபாத்திரம் மட்டுமின்றி வில்லி கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார், மாரி 2 படங்கள் வெற்றியானதையடுத்து தற்போது கன்னி ராசி, ரணம், வெல்வெட் நகரம், காட்டேரி போன்ற படங்கள் வெளிவர தயாராகவுள்ளது. அதே சமயம் நடிப்பு மட்டுமல்லாது பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்காக சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் மூலம் புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு உணவு, முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக இன்று ரயில் மூலமாக மாலை 5.45 மணிக்குச் சென்னை ரயில் நிலையம் (ரிப்பன் பில்டிங் சப்வே அருகில்) மேற்கு வங்காளம் மாநிலத்திற்குச் செல்லும் 2000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள +918122231444 எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.