நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சிறையில் அடைப்பு !

 

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சிறையில் அடைப்பு !

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சிறையில் அடைப்பு !

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த பலரும் வருகின்றனர். நடிகை ராகினி திவேதி கைதான நிலையில் கர்நாடகாவில் போதைப்பொருள் விவகாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் கடந்த 8 ஆம் தேதி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற அனுமதியை பெற்று சஞ்சனா கல்ராணி வீட்டில் போதை பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சோதனை செய்தனர். பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சிறையில் அடைப்பு !

இந்நிலையில் சஞ்சனாவிடம் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை சஞ்சனாவுக்கு நீதிபதி 2 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.