‘மரண படுக்கையில் உருக்கமான பதிவு’..இளம் நடிகை திவ்யா சௌக்ஸி புற்றுநோயால் காலமானார்.. !

 

‘மரண படுக்கையில் உருக்கமான பதிவு’..இளம் நடிகை திவ்யா சௌக்ஸி புற்றுநோயால் காலமானார்.. !

பாலிவுட்டில் பிரபலமான டிவி சேனல் ஒன்றில் பாடகியாகவும் நடிகையாகவும் பார்வையாளர்களை கவர்ந்தவர் திவ்யா சௌக்ஸி. இவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். சமீபத்தில் இவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

‘மரண படுக்கையில் உருக்கமான பதிவு’..இளம் நடிகை திவ்யா சௌக்ஸி புற்றுநோயால் காலமானார்.. !

அவர் தனது இறப்பிற்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

‘மரண படுக்கையில் உருக்கமான பதிவு’..இளம் நடிகை திவ்யா சௌக்ஸி புற்றுநோயால் காலமானார்.. !

அதாவது, “நான் சொல்ல நினைப்பதை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. எனக்கு உடல்நிலை மோசமானதும் பல மாதங்களாக ஆறுதல் மெசேஜ்கள் வந்து கொண்டிருக்கிறது. இப்போது நான் என் மரண படுக்கையில் இருக்கிறேன். நான் இன்னும் வலிமையாக தான் இருக்கிறேன். அடுத்த முறையாவது வலி இல்லாத ஒரு வாழ்க்கை கிடைக்கட்டும்” என்று பதிவட்டுள்ளார். இவரது மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் திவ்யா சௌக்ஸி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.