‘நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிடக் கூடாது’ : நீதிமன்றம் உத்தரவு

 

‘நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிடக் கூடாது’ : நீதிமன்றம் உத்தரவு

நடிகை அமலா பால், பாடகர் பவ்னிந்தர் சிங்கை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஏ.எல். விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற அவர், விஜய் வேறு திருமணம் செய்து கொண்டதால் அமலா பாலும் மறுமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனை பவ்னிந்தர் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களும் உறுதிப்படுத்தின.

‘நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிடக் கூடாது’ : நீதிமன்றம் உத்தரவு

திருமண கோலத்தில் அமலா பாலுடன் இருப்பது போல போட்டோக்களை வெளியிட்ட பவ்னிந்தர், சிறிது நேரத்திலேயே அதனை நீக்கியது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தங்களுக்கு திருமணம் ஆனதாக கூறி புகைப்படங்களை வெளியிட்ட பவ்னிந்தர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என அமலா பால் தரப்பில், நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில், பவ்னிந்தர் சிங்கிற்கு எதிராக அமலா பால் வழக்கு தொடர்ந்தார்.

‘நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிடக் கூடாது’ : நீதிமன்றம் உத்தரவு

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமுக வலைதளங்களில் வெளியிட தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாடகரும் தொழிலதிபருமான பவ்னிந்தர் சிங்கிற்கு இந்த உத்தரவை பிறப்பித்தனர். 2019ல் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் அனுமதியின்றி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக அமலா பால் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.