‘சிரிக்க வைத்தவர் இன்று சோகத்தில் ஆழ்த்திவிட்டார்’ – ஓபிஎஸ் இரங்கல்!

 

‘சிரிக்க வைத்தவர் இன்று சோகத்தில்  ஆழ்த்திவிட்டார்’ – ஓபிஎஸ் இரங்கல்!

சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘சிரிக்க வைத்தவர் இன்று சோகத்தில்  ஆழ்த்திவிட்டார்’ – ஓபிஎஸ் இரங்கல்!

நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது இறப்புக்கு திரையுலகை சேர்ந்த பலரும் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய திரு.விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.

பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்

மை ஆழ்த்திவிட்டார். திரு.விவேக் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.