‘அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!’ வைரமுத்து கதறல்!

 

‘அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!’   வைரமுத்து கதறல்!

பிரபல நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தநிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

‘அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!’   வைரமுத்து கதறல்!

1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்திரனின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமானார் விவேக் .இதுவரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். நடிகர் விவேக்கிற்கு 2009-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை ஐந்து முறை வென்றுள்ளார். உன்னருகே நானிருந்தால் ,ரன், பார்த்திபன் கனவு, அந்நியன், சிவாஜி படங்களுக்காக விருது பெற்றார்.ரஜினி, விஜய் ,அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருந்தார் விவேக், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தி படத்திலும் ஒப்பந்தமாகி இருந்தார்.விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் கூறி வருகிறார்கள்.

‘அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!’   வைரமுத்து கதறல்!

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.