மறைந்த பாடகர் எஸ்பிபி-க்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி!
Sep 26, 2020, 13:46 IST1601108182000
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் எஸ்பிபி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூர் கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதனால் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழு ஜெய்பூரில் உள்ளனர்.
இந்நிலையில் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உருவப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி, நடிகை கள் ராதிகா, டாப்ஸி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். எஸ்பிபியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாததால் படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் மரியாதை செலுத்தினர்.முன்னதாக எஸ்பிபி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.