விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் புது உத்தரவு!

 

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் புது உத்தரவு!

விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். தன் புகைப்படங்களை அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக புஸ்ஸி என் ஆனந்த் அவர்களை நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் புது உத்தரவு!

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது இயக்கத்தின் அதிகாரப்பூர்வ மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள், மாணவரணி தலைவர்கள், மகளிரணி தலைவிகள், விவசாய அணி தலைவர்கள், மீனவர் அணி தலைவர்கள், வழக்கறிஞர் அணி தலைவர்கள் மற்றும் வர்த்தக அணி தலைவர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். அதன்படி சென்னை, துபாய், திருவாரூர், வேலூர், மகாராஷ்டிரா, அந்தமான் மற்றும் நிக்கோபார், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் புது உத்தரவு!

மேற்கண்ட அணிகளின் தலைவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதோடு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள், ரசிகைகள் அனைவரும் மாவட்ட தலைவர்களின் ஆலோசனைபடி செயல்பட்டு நம் மக்கள் இயக்கத்தை மென்மேலும் சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளும் மாநில, மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் அணி தலைவர்களின் அனுமதி பெற்று பயன்படுத்தவேண்டும். அதனை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.