“நீங்கள் நினைத்தது போல நடக்கும்.. வேறு கட்சியில் சேர வேண்டாம்” – நடிகர் விஜய்

 

“நீங்கள் நினைத்தது போல நடக்கும்.. வேறு கட்சியில் சேர வேண்டாம்” – நடிகர் விஜய்

மாற்று கட்சியில் சேர வேண்டாம் என ரசிகர்களிடம் நடிகர் விஜய் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகிறது.

“நீங்கள் நினைத்தது போல நடக்கும்.. வேறு கட்சியில் சேர வேண்டாம்” – நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். தனது பெயரில் கட்சி ஏதும் தொடங்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் யாரும் கட்சியில் இணைய வேண்டாம் என்றும் நடிகர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனையடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட ஷோபாவும், பத்மநாபனும் பதிவி விலகல் செய்ததால் எஸ்.ஏ.சி ஆரம்பித்த கட்சிக்கு அடுத்தடுத்த சிக்கல் ஏற்பட்டது.

“நீங்கள் நினைத்தது போல நடக்கும்.. வேறு கட்சியில் சேர வேண்டாம்” – நடிகர் விஜய்

இதன் காரணமாக, கட்சி ஆரம்பிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எஸ்.ஏ.சி அறிவித்து விட்டார். இது ஒரு புறமிருக்க, நடிகர் விஜய்யின் எந்த படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவில்லை. அதோடு, தெலுங்கில் மாஸ்டர் படம் தவறாக டப்பிங் செய்யப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், அதிருப்தி நிர்வாகிகளையும் ரசிகர்களையும் பனையூர் அலுவலகம் வரவழைத்து நடிகர் விஜய் காணொளி வாயிலாக பேசியதாக தகவல்கள் வெளியாகிறது. அப்போது, நீங்கள் நினைப்பது நடக்கும் என்றும் யாரும் மாற்றுக் கட்சியில் சேர வேண்டாம் என்றும் நிர்வாகிகளை விஜய் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இந்த தகவல் நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க திட்டமிட்டிருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.