விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி புகார் : உள்நோக்கத்துடன் புகார் அளித்ததாக குற்றச்சாட்டு!

 

விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி புகார் : உள்நோக்கத்துடன் புகார் அளித்ததாக குற்றச்சாட்டு!

நடிகர் சூரி உள்நோக்கத்துடன் தனது தந்தை மீது புகார் அளித்திருப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி புகார் : உள்நோக்கத்துடன் புகார் அளித்ததாக குற்றச்சாட்டு!

நடிகர் சூரியிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் ‘வீர தீர சூரன்’ படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா என்பவர் மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்.

விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி புகார் : உள்நோக்கத்துடன் புகார் அளித்ததாக குற்றச்சாட்டு!

சம்பள பாக்கியை தர மறுத்த நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் ரமேஷ் குடவாலா நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

விஷ்ணு விஷாலின் தந்தை மீது நடிகர் சூரி புகார் : உள்நோக்கத்துடன் புகார் அளித்ததாக குற்றச்சாட்டு!

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். “கவரிமான் பரம்பரை” என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.

உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.