எல்லாரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கோங்க – நடிகர் சூரி வலியறுத்தல்!

 

எல்லாரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கோங்க – நடிகர் சூரி வலியறுத்தல்!

மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவையே புரட்டி போட்டு விட்டது. ஆக்சிஜன் கிடைக்காமலும் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் திண்டாடிய கோரமான நிலை மனதை உலுக்கியது. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களும் எரிக்க இடமில்லாமல் பிணங்கள் மயானங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த சம்பவங்களும் பதைபதைக்க வைத்தது. இத்தகைய சூழல் மீண்டும் நிகழாமலிருக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

எல்லாரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கோங்க – நடிகர் சூரி வலியறுத்தல்!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என நடிகர் சூரி வலியுறுத்தியுள்ளார். ஊடகத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, இரண்டாம் அலை மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஊடகவியலாளரின் பணி தியானத்திற்குரிய பணி. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது என்று கூறினார்.,மேலும் மூன்றாவது அலை வரவே கூடாது என தான் வேண்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.