என் பிறந்த நாளன்று ஊரில் இருக்க மாட்டேன்; வீட்டு முன்பு கூடாதீர்கள்- நடிகர் சிலம்பரசன்

 

என் பிறந்த நாளன்று ஊரில் இருக்க மாட்டேன்; வீட்டு முன்பு கூடாதீர்கள்- நடிகர் சிலம்பரசன்

பிறந்தநாளன்று தான் வெளியூர் செல்ல இருப்பதால் ரசிகர்கள் தனது வீட்டிற்கு முன் கூடாதீர்கள் என நடிகர் சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. இதனிடையே தனது 38 ஆவது பிறந்தநாளை பிப்ரவரி 3 ஆம் தேதி கொண்டாடுகிறார். வழக்கமாக பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் சிம்பு தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பிறந்தநாளை கொண்டாடுவார். மேலும் அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டு, சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் தனது பிறந்தநாளன்று வெளியூர் செல்லவிருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

என் பிறந்த நாளன்று ஊரில் இருக்க மாட்டேன்; வீட்டு முன்பு கூடாதீர்கள்- நடிகர் சிலம்பரசன்

இதனையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலகட்டத்தில் வெகு விரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் திரைப்படத்திற்கு முகுந்த ஆதரவு தந்து வெற்றிடையச் செய்தீர்கள். உங்களை ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

எனது பிறந்தநாளன்று நான் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன். என் பிறந்தநாளன்று எனது குடும்பத்தினர் வீட்டு முன்பு காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம். உங்களை நேரில் சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன்”