கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினிகாந்த்!

 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினிகாந்த்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி தான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதனால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் தடுப்பு செலுத்திக் கொண்டு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினிகாந்த்!

அந்த வகையில், அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரது மகள் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம்ம தலைவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போரை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ரஜினிகாந்த்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தடைபட்டது. ரஜினிகாந்தின் உடல்நிலையும் ஒரு காரணம். பல மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடும் கட்டுப்பாடுகளுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.