மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர்  நாசர் மனைவி நீக்கம்!

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார்.

கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்தக் கட்சியில் பல திரை பிரபலங்களும், சமூகப் பணியாளர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர் . அந்த வகையில் நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன், நாசர் மனைவி கமீலா நாசர் உள்ளிட்டோர் கட்சியில் அங்கம் வகித்து வருவதோடு பொறுப்புகளிலும் உள்ளனர். இதில் கவிஞர் சினேகன், ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் சார்பில் களமிறக்கப்பட்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர்  நாசர் மனைவி நீக்கம்!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார்.அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கமீலா நாசரை விடுவிப்பதாக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கட்சியின் மாநில செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவியை வகித்து வந்த திருமதி கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர்  நாசர் மனைவி நீக்கம்!

அதிருப்தியில் இருந்த கமீலா சென்னை மண்டல கட்டமைப்பு மாநில செயலாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.