அந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலைமையா?… நாசர் உருக்கம்!

 

அந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலைமையா?… நாசர் உருக்கம்!

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்போடு போற்றப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். தனது படங்களின் மூலமாக மக்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைத்தவர். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறைக் காட்டிய விவேக், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து பல லட்சம் மரக் கன்றுகளை நட்டார். அந்த மரங்களும் கூட அவரது மறைவுக்கு கண்ணீர் சிந்துவதாக விவேக்கிற்கு நெருக்கமானவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.

அந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலைமையா?… நாசர் உருக்கம்!

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் விவேக்கின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல, நடிகர்கள் சூர்யா, கார்த்திக், மயில்சாமி, மனோபாலா, பாண்டியராஜன் உள்ளிட்டோரும் நடிகைகள் ஜோதிகா, திரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் நாசரும் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலைமையா?… நாசர் உருக்கம்!

அதன் பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசர், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. விடியற்காலை நான் கேட்ட முதல் செய்தி இது தான். நகைச்சுவை நடிகர்களுள் மிக முக்கியமான நபர் விவேக். மக்கள் அழுவது மட்டுமல்லாது அவர் நட்ட மரங்களும் கண்ணீர் சிந்துகின்றன. ஒரு மாதத்துக்கு முன்பு தான் நானும் விவேக்கும் மணாலியில் ஷூட்டிங் சென்றோம். அப்போது நிறைய விஷயங்கள் பேசினோம். இவ்வளவு தெளிவான மனிதருக்கு இப்படி ஒரு நிலைமையா? என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்று உருக்கமாக பேசினார்.