‘மிகவும் பெருமையாக இருக்கிறது’ – சென்னை மாநகராட்சிக்கு நடிகர் மாதவன் பாராட்டு!

 

‘மிகவும் பெருமையாக இருக்கிறது’ – சென்னை மாநகராட்சிக்கு நடிகர் மாதவன் பாராட்டு!

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று முன்தினம் மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை கடுமையாக பாதிக்கச் செய்தது. இருப்பினும், அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பியது.

‘மிகவும் பெருமையாக இருக்கிறது’ – சென்னை மாநகராட்சிக்கு நடிகர் மாதவன் பாராட்டு!

பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்து பேரிடர் மீட்புப் படையினர், மக்கள் பாதிக்காத வண்ணம் அவர்களை மீட்டனர். மக்களுக்கு நிவாரண பொருட்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டது. தொடர்ந்து விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மக்கள் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநகராட்சி ஊழியர்களால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், சாலையில் தேங்கிய நீர் விரைவில் வெளியேற்றப்பட்டு மின் இணைப்பும் வழங்கப்பட்டது.

‘மிகவும் பெருமையாக இருக்கிறது’ – சென்னை மாநகராட்சிக்கு நடிகர் மாதவன் பாராட்டு!

சென்னை மக்களை காப்பாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் மாதவனும் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். இயல்பு நிலையை மீட்டுக் கொண்டு வந்தது பெருமையாகஇருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.