டிராக்டர் பேரணி வன்முறை : நடிகர் தீப் சித்து கைது!

 

டிராக்டர் பேரணி வன்முறை :  நடிகர் தீப் சித்து கைது!

டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டிராக்டர் பேரணி வன்முறை :  நடிகர் தீப் சித்து கைது!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து கலந்துகொண்டார். அப்போது செங்கோட்டையில் சீக்கியர் கொடியை ஏற்ற அவர் காரணமாக இருந்ததாகவும், இதனால் தான் போராட்டம் வன்முறையாக மாறியது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

டிராக்டர் பேரணி வன்முறை :  நடிகர் தீப் சித்து கைது!

இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்ட தீப் சித்து , “வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாகவேசெங்கோட்டையில் சீக்கிய மதக் கொடி ஏற்றப்பட்டது. உரிமைகள் மறுக்கப்படும்போது போராட்டத்தில் மக்களின் கோபம் இயற்கையானது. அதனால் தான் வன்முறை வெடித்துள்ளது’’ என்று பதிவிட்டிருந்தார். இதை விவசாய சங்கங்கள் ஏற்க மறுத்தன.

டிராக்டர் பேரணி வன்முறை :  நடிகர் தீப் சித்து கைது!

இந்நிலையில் டெல்லியில் குடியரசு தினத்தில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைதுசெய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டதாக தீப் சித்துவை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது. தலைமறைவாக இருந்து வந்த தீப் சித்து பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்திருந்தது போலீஸ். இந்த சூழலில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைதாகியுள்ளார்.