‘சாதாரண பயணிகள் ரயிலினை இயக்க நடவடிக்கை’ : மத்திய அரசுக்கு எம்.பி.சு.வெங்கடேசன் நன்றி!

 

‘சாதாரண பயணிகள் ரயிலினை இயக்க நடவடிக்கை’ : மத்திய அரசுக்கு எம்.பி.சு.வெங்கடேசன் நன்றி!

சாதாரண பயணிகள் ரயிலினை இயக்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதற்கு மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

‘சாதாரண பயணிகள் ரயிலினை இயக்க நடவடிக்கை’ : மத்திய அரசுக்கு எம்.பி.சு.வெங்கடேசன் நன்றி!

இதுகுறித்து மதுரை எம்.பி.சு. வெங்கடேசன், ” இந்திய ரயில்வே சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால் இந்திய ரயில்வே முழுவதும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக்காட்டி அவற்றை இயக்க ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன் . ரயில்வே அமைச்சரை நானும் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியும் நேரில் வலியுறுத்தினோம்.

இப்போது ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே முழுவதும் உள்ள ரயில்வே பயணி போக்குவரத்து அதிகாரிகளை பயணி வண்டிகளை மெமு , டெமு பாரம்பரிய பழைய வண்டிகள் இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வசதியாக ஏற்பாடுகளை செய்திடவும், அவற்றுக்கான கால அட்டவணைகளை 16ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும், ரயில்வே வாரியம் அனைத்து ரயில்களையும் கோரியுள்ளது.

இதற்கு ரயில்வேயில் பயணி போக்குவரத்து அதிகாரி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து கோட்டங்களிலும் இதற்கான கால அட்டவணையை தயாரித்து அனுப்புமாறு கேட்டுள்ளார். அனைத்து கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளனர். இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். ரயில்வே அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.