விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை !

 

விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை !

விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படுவதில்லை. பல மாநிலத்தவர்கள் விமானங்களில் பயணிப்பதாக காரணம் கூறப்பட்டாலும், தமிழர்களிடையே இது பெரும் உறுத்தலாகவே இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஒரு சில விமானநிலையங்களில், தமிழில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை !

இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடக்கோரி டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்கை, அமைச்சர் மாபா பாண்டியராஜன் சந்தித்து பேசினார்.

விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை !

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘விமான அறிவிப்புகளை தமிழில் வெளியிட பல்வேறு நிறுவனங்களிடம் பேசியுள்ளோம். அலுவல் மொழி சட்டத்தில் தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிடுவதற்கான தடை விரைவில் அகற்றப்படும்’ என தெரிவித்தார்.