“அடேய் !நீ ஆசையா தொட்ட இடத்திலெல்லாம் ஆசிட் பட்டிருச்சே..” -நடுரோட்டில் ஆசிட் வீச்சில் அலறிய பெண்

 

“அடேய் !நீ ஆசையா தொட்ட இடத்திலெல்லாம் ஆசிட் பட்டிருச்சே..” -நடுரோட்டில் ஆசிட் வீச்சில் அலறிய பெண்


குடும்பம் நடத்த வராத மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தார்கள்.

“அடேய் !நீ ஆசையா தொட்ட இடத்திலெல்லாம் ஆசிட் பட்டிருச்சே..” -நடுரோட்டில் ஆசிட் வீச்சில் அலறிய பெண்


மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் தவுலத்பூர் பகுதியில் வசிக்கும் சபிதா சர்க்கார் என்ற பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திலீப் மஜூம்தரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களின் திருமணத்திற்கு பிறகு சபிதாவை அவரின் மாமியார் கொடுமை செய்தார் .இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்து கொண்டே இருந்தது .மேலும் அவரின் மாமியார் மட்டுமல்லாமல் அந்த மாமியாரின் உறவினர்கள் கூட அந்த சபிதாவை அடித்து கொடுமைகள் செய்து வந்தார்கள் .அவர்களோடு அவரின் கணவரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை தாக்கியுள்ளார் .
இதனால் அந்த பெண் தனது கணவரை பிரிந்து விட்டு தன்னுடைய தந்தையின் வீட்டில் வசித்து வந்தார் .அதன் பிறகு அவரின் தந்தையின் வீட்டிலிருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு வேலைக்கு சென்று வந்தார் .இதனால் அவரின் கணவர் அவரின் மனைவியை குடும்பம் நடத்த பலமுறை கூப்பிட்டும் அவர் போகவில்லை .
அதனால் அவர் கடுமையாக கோபமுற்றார் .அதனால் அவரை பழிவாங்க துடித்தார் .
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அந்த பெண் சபிதா சைக்கிளில் அங்குள்ள சாலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியில் ஒரு இடத்தில அவரின் கணவர் ஆசிட் பாட்டிலுடன் காத்துக்கொண்டிருந்தார் .அப்போது அந்த பெண் சாலையில் வரும்போது அந்த மனைவியின் முகத்தை நோக்கி ஆசிடை வீசினர் .அந்த நேரம் அந்த பெண் சற்றே குனிந்ததால் அந்த ஆசிட் அவரின் கழுத்திலும் வாயிலும் பட்டது .இதனால் வ;லியில் துடித்த அந்த பெண்ணை அங்கிருந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்த்தார் .பிறகு அவரின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் ,அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தனது மருமகன் மீது போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர் திலீப் மஜூம்தரை கைது செய்தார்கள் .

“அடேய் !நீ ஆசையா தொட்ட இடத்திலெல்லாம் ஆசிட் பட்டிருச்சே..” -நடுரோட்டில் ஆசிட் வீச்சில் அலறிய பெண்