‘தூக்கில் தொங்கிய தண்டனை கைதி’ : மதுரை மத்திய சிறையில் பரபரப்பு!

 

‘தூக்கில் தொங்கிய தண்டனை கைதி’ : மதுரை மத்திய சிறையில் பரபரப்பு!

மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திடீர்நகர் அலாவுதீன் தோப்பு பகுதியை சேர்ந்த நாசர் (42), மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார். இன்று காலை அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தான் இருந்த அறையிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர். தகவல் அறிந்து வந்த கரிமேடு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

‘தூக்கில் தொங்கிய தண்டனை கைதி’ : மதுரை மத்திய சிறையில் பரபரப்பு!

கைதிகளுடன் பிரச்னை ஏற்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாசர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.