மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 200 பேர், அதிமுகவில் இணைந்தனர்

 

மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 200 பேர், அதிமுகவில் இணைந்தனர்

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், அந்தந்த கட்சிகளில் இருந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு, கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு அதிமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.