அப்துல் கலாம் நினைவு தினம்… மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

 

அப்துல் கலாம் நினைவு தினம்… மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

ராமநாதபுரம்

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள மணிமண்டபத்தில் கலாமின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபம் மின் விளக்குகளாலும், அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அப்துல் கலாம் நினைவு தினம்… மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

தொடர்ந்து, நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, ராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் மயில் வாகனன், எஸ்.பி., கார்த்திக், எம.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் அப்துல் கலாமின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, அப்துல் கலாமின் பேரன்களான ஷேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், நடிகர் தாமு, ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டனர்.