திண்டுக்கல்லில் காதலியை கொன்ற இளைஞர் உள்ளிட்ட 2 பேர் குண்டாசில் அடைப்பு…

 

திண்டுக்கல்லில் காதலியை கொன்ற இளைஞர் உள்ளிட்ட 2 பேர் குண்டாசில் அடைப்பு…

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் மாற்று சமூகத்தவர் என்பதால் காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகரை பகுதியில் கடந்த மாதம் வடமதுரையை சேர்ந்த 22 வயது பெண் ஜெயஶ்ரீ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து, ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயஶ்ரீயின் காதலன் பழனியை சேர்ந்த தங்கதுரை மற்றும் அவரது நண்பர் ஜெகநாதன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

திண்டுக்கல்லில் காதலியை கொன்ற இளைஞர் உள்ளிட்ட 2 பேர் குண்டாசில் அடைப்பு…

அப்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பவதால் காதலியை நண்பருடன் சேர்ந்த கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் போலீசார் கைதுசெய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்த நிலையில், காதலியை கொலை செய்த தங்கத்துரை மற்றும் அவரது நண்பர் ஜெகநாதன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா பரிந்துரை வழங்கினார்.

அதனை ஏற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, போலீசார் திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த இருவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.