காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… ஆர்.டி.ஓ. விசாரணை!

 

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… ஆர்.டி.ஓ. விசாரணை!

தூத்துக்குடி

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் மீனாட்சி (25) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மாத குழந்தை உட்பட 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு தம்பதியினர் இருவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து துங்கியுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… ஆர்.டி.ஓ. விசாரணை!

இதனால் சுப்பையா எழுந்து சென்று பார்த்தபோது, மீனாட்சி தொட்டில் கம்பியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பையா, முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 4 ஆண்டுகளில் மீனாட்சி உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் விசாரித்து வருகிறார். காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது, அந்த பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.