3 பெண்களை திருமணம் செய்த இளைஞர், காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

 

3 பெண்களை திருமணம் செய்த இளைஞர், காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர் ஒருவர், 4-வதாக காதலியுடன் தஞ்சமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3 பெண்களை திருமணம் செய்த இளைஞர், காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த இஸ்மாயில் என்பவரது மகன் சேட்டு(30). இவர், பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சேட்டு, அதேபகுதியை சேர்ந்த பஷீர் என்பவரது மகள் மும்தாஜை(19) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இது குறித்து மும்தாஜின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் சேட்டு – மும்தாஜ் ஜோடி இன்று, அடைக்கலம் கோரி திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது, சேட்டுவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவருக்கு ஏற்கனவே ஊத்தங்கரையை சேர்ந்த 3 பெண்களுடன் திருமணம் நடைபெற்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் திருமண மோசடி குறித்து சேட்டுவின் 2-வது மனைவி ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அவர் தற்போது 4-வதாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய அழைத்து வந்தது போலீசாரை வாயடைத்து போக செய்ததது.

3 பெண்களை திருமணம் செய்த இளைஞர், காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

இதனிடையே திருப்பத்தூர் காவல் நிலையத்தில் சேட்டு மற்றும் மும்தாஜ் தஞ்சமடைந்ததை அறிந்த ஊத்தங்கரை காவல் நிலைய போலீசார், அவர்கள் இருவரையும விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 3 பெண்களை திருமணம், 4-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.