பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை

 

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கல்பலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி ஜெயகுமார்(43) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை

அரக்கோணம் அடுத்த கல்பலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கல்பலாம்பட்டுவிலிருந்து பனப்பாக்கம் வந்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் முட்டை, சத்துணவு பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஜெயகுமார்(43) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி வற்புறுத்தி ஏற்றிக் கொண்டு கல்பலாம்பட்டு செல்லாமல் பொய்கைநல்லூர் கிராம ஏரிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வீட்டில் கொண்டு போய் விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து 14 வயது பள்ளி மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஜெயகுமாரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.