‘வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை’ மர்ம கும்பலுக்கு வலைவீச்சு: அதிர்ச்சி சம்பவம்!

 

‘வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை’ மர்ம கும்பலுக்கு வலைவீச்சு: அதிர்ச்சி சம்பவம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் தொட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (55). இவருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். ராஜப்பா புதினா வியாபாரம் செய்து குடும்பத்தை பார்த்து வந்ததாக தெரிகிறது. ராஜப்பாவுக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நிலத் தகராறு இருந்திருக்கிறது.

‘வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை’ மர்ம கும்பலுக்கு வலைவீச்சு: அதிர்ச்சி சம்பவம்!

இந்த நிலையில், இன்று காலை பைக்கில் சென்று கொண்டிருந்த ராஜப்பாவை மர்ம கும்பல் வழிமறித்துள்ளது. அச்சமடைந்த ராஜப்பா, பைக்கில் இருந்து கீழே இறங்கி ஓடத் தொடங்கியுள்ளார். விடாமல் அவரை துரத்திய மர்ம கும்பல், அவரை வெட்டி படுகொலை செய்திருக்கிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ராஜப்பாவுடன் நிலத் தகராறில் இருந்த நபர் ஆட்களை வைத்து திட்டமிட்டு கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த நபர் தான் கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.