’மீண்டும் மீண்டும் மூக்கு உடைபடும் ட்ரம்ப்’ – அமெரிக்க தேர்தல்

 

’மீண்டும் மீண்டும் மூக்கு உடைபடும் ட்ரம்ப்’ – அமெரிக்க தேர்தல்

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பிலும், ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

அமெரிக்க அதிபராக எலெக்ட்ரால் காலேஜ் வாக்குகள் 270 எடுக்க வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்றுவிட்டார். இதனால், ஜோ பைடன் அதிபராவது உறுதியாகியுள்ளது.

’மீண்டும் மீண்டும் மூக்கு உடைபடும் ட்ரம்ப்’ – அமெரிக்க தேர்தல்

ஆனாலும், பல மாநிலங்களில் ஜோ பைடன் வென்றதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் தற்போதைய அதிபர் ட்ரம்ப். ஆனபோதும், பல இடங்களிலிருந்தும் ட்ரம்ப்க்கு எதிராகவே தீர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

பென்சில்வேனியா, ஜியார்ஜியா, டெக்ஸாஸ் மாகாணங்களின் தேர்தல் முடிவு மாறினால் தனக்கு மீண்டும் அதிபராகும் வாய்ப்பு அமையும் என டொனால்டு டரம்ப் நினைத்தார். ஆனால், பென்சில்வேனியா, ஜியார்ஜியா மாகாணங்களில் ட்ரம்பின் மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

’மீண்டும் மீண்டும் மூக்கு உடைபடும் ட்ரம்ப்’ – அமெரிக்க தேர்தல்

தற்போது டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக ட்ரம்ப் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது மீண்டும் ட்ரம்ப்க்கு பெரும் பின்னடைவு. இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்காவின் அதிபராகப் பதவி ஏற்க விருக்கிறார் ஜோ பைடன்.