‘6 ஆண்டுகளாக பெண் காவலருடன் லிவ்விங் டூ கெதர்’ ஏமாற்றி விட்டுச் சென்ற காவலருக்கு வலைவீச்சு!

 

‘6 ஆண்டுகளாக பெண் காவலருடன் லிவ்விங் டூ கெதர்’ ஏமாற்றி விட்டுச் சென்ற காவலருக்கு வலைவீச்சு!

விழுப்புரம் அருகே பெண் காவலரை 6 ஆண்டுகளாக காதலித்து ஏமாற்றி விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தை சேர்ந்த அருள், விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். செஞ்சியை சேர்ந்த 26 வயது இளம்பெண் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார். அருள் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது பெண் காவலருக்கு இவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

‘6 ஆண்டுகளாக பெண் காவலருடன் லிவ்விங் டூ கெதர்’ ஏமாற்றி விட்டுச் சென்ற காவலருக்கு வலைவீச்சு!

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், தனியாக வீடு எடுத்து ஒன்றாக இருந்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது அருளின் குடும்பத்திற்கும் தெரியுமாம். இந்த நிலையில், அருள் விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால் அவர் விழுப்புரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், அவர் அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்.

‘6 ஆண்டுகளாக பெண் காவலருடன் லிவ்விங் டூ கெதர்’ ஏமாற்றி விட்டுச் சென்ற காவலருக்கு வலைவீச்சு!

இதனை அறிந்த பெண் காவலர், விழுப்புரம் காவல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இருவரும் 6 ஆண்டுகளாக ஒன்றாக இருந்ததாகவும் தற்போது அவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாகவும் பெண் காவலர் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில், அருள் மீது விழுப்புரம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.