‘கடைசி மகனுக்கு எப்டியாவது கல்யாணம் பண்ணிடனும்’…மரத்தால் ஆன உருவ பொம்மையுடன் நடந்த விநோத திருமணம்!

 

‘கடைசி மகனுக்கு எப்டியாவது கல்யாணம் பண்ணிடனும்’…மரத்தால் ஆன உருவ பொம்மையுடன் நடந்த விநோத திருமணம்!

உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஷிவ் மோகன். இவருக்கு 9 மகன்கள் இருக்கின்றனர். இவரது 8 மகன்களுக்கு திருமணம் ஆகி முடிந்த நிலையில், கடைசி மகன் மற்றும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். தான் இறப்பதற்கு முன்னர் கடைசி மகனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய ஷிவ் மோகன், விநோதமான திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

‘கடைசி மகனுக்கு எப்டியாவது கல்யாணம் பண்ணிடனும்’…மரத்தால் ஆன உருவ பொம்மையுடன் நடந்த விநோத திருமணம்!

அதாவது மரத்தால் ஆன உருவ பொம்மைக்கு அருகே அவரது கடைசி மகனை அமரச் செய்து, சடங்குகள் நடத்தி திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அம்மாநிலத்தில் புது விதமாக நடந்த இந்த திருமணத்தில், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.

‘கடைசி மகனுக்கு எப்டியாவது கல்யாணம் பண்ணிடனும்’…மரத்தால் ஆன உருவ பொம்மையுடன் நடந்த விநோத திருமணம்!

கடைசி மகனுக்கு ஏன் இவ்வாறு திருமணம் செய்து நடந்தது குறித்து பேசிய ஷிவ் மோகன், அவருக்கென்று சொத்து ஏதும் இல்லை என்பதாலும் அவர் அறிவாளியாக இல்லை என்பதாலும் இப்படி திருமணம் செய்ததாக கூறியுள்ளார். மேலும், தான் இறப்பதற்கு முன்னரே தன்னுடைய 9 மகனுக்கும் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற ஆசையால் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறியிருக்கிறார்.