மாற்றுத்திறனாளி மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்த கொடூர கணவன்!

 

மாற்றுத்திறனாளி மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்த கொடூர கணவன்!

கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் பாம்பை விட்டு கடிக்க வைத்து மாற்றுத்திறனாளி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா (25). பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணான இவருக்கும், தனியார் வங்கியில் வேலை பார்க்கும் சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தனது கணவருடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்த உத்ராவை பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அணலி வகை பாம்பு கடித்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து, 16 நாட்கள் சிகிச்சை பின்னர் வீடு திரும்பிய உத்ராவை மீண்டும் பாம்பு கடித்ததால், உடல் முழுவதும் நீல நிறமாக மாறி வாயில் நுரை தள்ளிய படி கடந்த 7ஆம் தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

மாற்றுத்திறனாளி மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்த கொடூர கணவன்!

பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் உத்ராவை சொத்துக்காக கணவரே பாம்பை விட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர் சுராஜை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் என வரதட்சனை கொடுக்கப்பட்ட போதும், கூடுதலாக வரதட்சனை கேட்டு உத்ராவை சூரஜ் கொடுமைப்படுத்தியதால் அவரே திட்டமிட்டு உத்ராவை கொலையை செய்தது விசாரணையில் தெரியவந்தது.