‘ராட்சத அலையில் சிக்கிக் கொண்ட மகள்’ காப்பாற்றச் சென்ற தந்தை பரிதாப பலி!

 

‘ராட்சத அலையில் சிக்கிக் கொண்ட மகள்’ காப்பாற்றச் சென்ற தந்தை பரிதாப பலி!

பெசன்ட் நகர் கடற்கரையில் மகளை காப்பாற்றச் சென்ற தந்தை, ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வந்தவர் பாலாஜி(55). இவர் ஐடி ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், இவரும் இவரது மகள் ரேவதியும்(11) கடற்கரைக்கு சென்றுள்ளனர். அலைச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரேவதி, ராட்சத அலையில் சிக்கிக் கொண்டதால் அவரை காப்பாற்ற பாலாஜி கடலில் இறங்கியிருக்கிறார். மகளை காப்பாற்றிய பாலாஜி, கரையேற முயன்ற போது மற்றொரு ராட்சத அலை எழுந்து பாலாஜியை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

‘ராட்சத அலையில் சிக்கிக் கொண்ட மகள்’ காப்பாற்றச் சென்ற தந்தை பரிதாப பலி!

இதில் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மீனவர்கள் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகவல் அறிந்த வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் உயிரைக் காப்பாற்ற முயன்று, தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.