ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி மரணம்!

 

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி மரணம்!

திருமயம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சிவபுரத்தில் வசித்து வந்தவர் மாணிக்கம். இவர் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றிய நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றிருக்கிறார். திருமயம் அருகே நேற்று இரவு கனமழை பெய்ததால், அப்பகுதி மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இன்று காலை அவ்வழியே சென்ற மாணிக்கம், அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்ற முயன்றிருக்கிறார். அப்போது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி மரணம்!

இந்த விபத்தில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. மின்கம்பியை அகற்ற முயன்ற மாணிக்கம், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.