சகோதரியின் 6 வயது மகளை… பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!

 

சகோதரியின் 6 வயது மகளை… பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!

மகாராஷ்டிராவில் 6 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள உல்ஹாஸ்நகரில் வசித்து வரும் நபர் அப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியுடன் விளையாடுவதாக கூறிய அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த நபர், பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் மூத்த சகோதரர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சகோதரியின் 6 வயது மகளை… பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!

ஆத்திரமடைந்த பெற்றோர் அந்த நபரை அடித்து உதைத்ததோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை உறுதி செய்ய போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், சிறுமி பலமுறை வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். விசாரணையில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தனது சகோதரியின் மகள் என்றும் உறவினர் என்பதால் தன்னை நம்பி பெற்றோர் சிறுமியை வீட்டுக்கு அனுப்பியதாகவும் அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.